செவ்வாய், 24 ஜனவரி, 2023

ஆயில் புல்லிங்

 ஆயில் புல்லிங் என்றால் என்ன?



எண்ணெய் கொப்பளித்தல் (ஆயில் புல்லிங்) இந்தியாவில் பல நூறு ஆண்டுகளாக பின்பற்றப்படும் ஆயுர்வேத சிகிச்சை முறையாகும். முப்பதுக்கும் மேற்பட்ட உடல் சார்ந்த நோய்களுக்கு எண்ணெய் கொப்பளித்தல் மிக சிறந்த தீர்வாக உள்ளது. இது மேலும் வாய் சம்பந்தப்பட்ட பிரச்சனைகளுக்கு சிறந்த நிவாரணியாக அமைகிறது. ஆயுர்வேத மருத்துவத்தில் எண்ணெய் கொப்பளித்தல் என்பது கவாலா - கண்டுஷா என அழைக்கப்படுகிறது.

கவாலா என்றால் கொப்பளித்தல் மற்றும் கண்டுஷா என்றால் வாய்க்குள் திரவத்தை வைத்துக்கொள்ளுதல் என்று அறியப்படுகிறது. ஒரு டீஸ்புன் எண்ணையை எடுத்து வாயில் இட்டு சிறிது நேரம் கொப்பளித்துக்கொண்ட இருக்கவும் எண்ணெய் தண்ணீர் பதத்துக்கு மாறி வெண்மை கலந்த பழுப்பு நிறத்தை அடைந்தவுடன் வெளியே துப்பிவிடவும்.


ஆயில் புல்லிங் எப்பொழுது செய்யலாம்?

காலையில் வெறும் வயிற்றில் செய்வது மிக சிறந்த பலன்களை தரும்.

குறிப்பு: ஆயில் புல்லிங் செய்த பின்பு தண்ணீர் விட்டு வாயை நன்கு சுத்தம் செய்து கொள்ளவும். வாய் கொப்பளித்த எண்ணையை எக்காரணம் கொண்டும் விழுங்கிவிட கூடாது.


எந்த எண்ணெய் பயன்படுத்தலாம்?

செக்கில் ஆடிய தூய்மையான நல்லெண்ணெய், தேங்காய் எண்ணெய் ஆகியவற்றை பயன்படுத்தலாம்.

பலன்கள்: ஆயில் புல்லிங் பற்களில் பாக்டீரியா கிருமிகள் சேர்வதையும், துர்நாற்றம் விசுவதையும், பல் செல்கள் பாதிப்பு அடைவதையும் தடுக்கிறது. ஆயில் புல்லிங் பற்கள் மற்றும் ஈறுகளுக்கு நன்மை சேர்ப்பது மட்டுமல்லாமல், நம் உடம்பின் உள்ளுறுப்புகளை (இன்டெர்னல் கிளின்சிங்) சுத்தம் செய்வதிலும் நன்மை பயக்குகின்றது.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக