கோவில் விளக்கம்
கோவில் = கோ + இல். கோ என்றால் இறைவன். இல் என்றால் இல்லம் அல்லது வீடு. இறைவன் குடி கொண்டிருக்கும் இடமே கோவில் ஆகும்.
மனித உடலும் கோவிலும்
நமது உடலானது கோவிலுக்கு நிகரானது. மனித உடலானது ஒன்றின் மேல் ஒன்றாக அமைந்த ஐந்து அடுக்குகள் மற்றும் ஏழு படிகளை கொண்டது.
உணவு உடம்பு, பிராண உடம்பு, அறிவு உடம்பு, மன உடம்பு, இன்ப உடம்பு என ஐந்து உடல்கலே கோவிலின் பிரகாரத்துவம் போன்றது.
மனித உடலும் கோவில் அமைப்பும்
1. கால் பாதம் --> கோபுரம்.
2. அடிவயிற்று பகுதி --> கோடி மரமும் பலிபீடமும்.
3. அடிவயிற்றுக்கும் தொப்புளுக்கும் இடையில் உள்ள பகுதி --> அதிகார நந்தி.
4. தொப்புள் பகுதி --> அம்மன் இருக்கும் இடம்.
5. இருதய பகுதி --> நடராஜர் இருக்கும் இடம்.
6. தொண்டை பகுதி --> வாகன நந்தி இருக்கும் இடம்.
7. புருவ மத்திய பகுதி --> இறைவன் இருக்கும் இடம்.
8. மூளைப்பகுதி --> இறைவனின் தனிப்பெருங்கருணை ஒளி வீசும் இடம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக